சென்னையில் காணாமல் போகும் பூனைகள்; சாலையோரக் கடைகளில் பிரியாணியாகிறதா?- அதிர்ச்சித் தகவல்
சென்னையில் சமீபகாலமாக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் காணாமல்போன நிலையில்அவைசாலையோரபரியாணிகடைகளில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வரும்நிலையில்பிரியாணிக்கு நாய்களை கொன்று இறைச்சியாகபயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில்பல வீடுகளில்வளர்க்கப்பட்டஏராளமானபூனைகள்காணாமல் போயுள்ளன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் பூனைகளைப் பிடித்துச் சென்று கொன்று அதன் இறைச்சியை பிரியாணிக். கடைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது சாலையோரபிரியாணிகடைகளுக்குஇந்தபூனைஇறைச்சி பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது குறிப்பாக மதுபான கடைகள் அருகே உள்ள சில சாலையோர உணவகங்களில் இந்த இறைச்சி விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பூனைகள் காணாமல் போகும் தகவல் வெளியான நிலையில் இதுபற்றி ‘பீப்பிள்ஸ் பார் அனிமல்அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதைத் தொட...